தமிழ் இசை மும்மூர்த்திகள்
.jpg)
தமிழ் இசை மும்மூர்த்திகள் இசை உலகில் சங்கீத மும்மூர்த்திகள் என அறியப்பட்டவர்கள் தியாகராஜர் , சியாமா சாஸ்திரிகள் , முத்துசாமி தீட்சிதர் ஆவர் . இது போலவே தமிழ் இசையின் மும்மூர்த்திகளென தமிழகம் போற்றும் புகழுடையவர்கள் திருமிகு சான்றோர் முத்துத்தாண்டவர் , மாரிமுத்தா பிள்ளை , அருணாசலக் கவிராயர் எனும் மூவர் . தேனினும் இனிய தமிழை கர்நாடக சங்கீத ராகங்களில் மிக நேர்த்தியாக பாடியவர்கள் இவர்கள். மார்கழி மாத சங்கீத சபாக்களில் இவர்களில் பாடல்கள் இடம் பெறாமல் இராது. ஆனால் சற்றே வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது இவை குறைவாகவே இருப்பதுதான் . இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் , பழம் பாடகர்கர்களான , திருமதி சுப்புலக்ஷ்மி , டி கே பட்டம்மாள் , ஜி என் பி , போன்றோருக்கு பின் தமிழிசை மும்மூர்த்திகளின் எத்துணை பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்பதே ஒரு கேள்விக்குறி ? 1. ஏன் பள்ளி கொண்டீர் ஜயா 2. யாரோ இவர் யாரோ 3. எனக்குன் இரு பதம் என்பதே திரும்ப திரும்ப ஒலிக்கின்றது . முத்துத் தாண்டவரின் பவ பிரியா அல்லது பவானி என்ற ராகத்தில் அமைந்த ' பூலோக கிரி கைலாச கிரி சித...