Posts

The Karmic Theory

Image
 The Karmic Theory The term Karma is classified into two forms: Dravya Karma and Bhava Karma. While some material particles constitute different forms, it is termed Dravya Karma, and the impure physical conditions, thoughts, and actions that form the causal factors for the accumulation of Karmic material particles constitute Bhava Karma. Here, wherever the term 'Karmic particles' is used, it refers to the cells - the genetic leftovers - micro orgasms. Both Karma - Dravya and Bhava are interrelated and exist in all Organisms in this material world in two forms: spiritual and non-spiritual.  According to Indian philosophy or the philosophers, this materialistic life is termed as 'Samsara' - a term used to denote the world of all living things, characterised by birth, their growth, development, decay, and death. Such a constituted world's  Samsara' is considered to be 'anadi' - without a starting point or beginning. In this context, where years are presumed...

ஶ்ரீஇராமர் - சூர்ப்பனகை - ஒரு காதல் விவாதம்

  ஶ்ரீஇராமர் - சூர்ப்பனகை - ஒரு காதல் விவாதம் அன்பு நண்பர்களே, தகைசால் பெரியோரே, நான் முகநூலில் அவ்வப்போது காணப்படுபவன். எனக்கென ஒரு வாசகர் வட்டமோ பின் தொடர்பவர்களோ இல்லை. என் மனதில் தோன்றும் ஜோதிட மற்றும் பொது கருத்துக்களை வெளியிடுபவன். இலக்கிய, ஜோதிட தன்னார்வலன். இலக்கிய ஈடுபாட்டினால் பல தமிழ், ஆங்கில நூல்களை படித்துக்கொண்டு இருக்கிறேன். பல அறிவு சார்ந்த விவாதங்களை பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். கம்ப இராமயணத்தை சற்று உள்ளார்ந்து படிக்கையில் கீழே குறிப்பிட்ட கம்பனின் வரிகள் எனக்குள்ளே 'இராமன் இத்தகைய பொருள் படும்படி கூறியிருப்பானா' என்று ஒரு சந்தேகம் தோன்றியது. கம்பனை தம்முள்ளே வரித்த எனக்கு மிகவும் பிடித்த முப்பெரும் அறிஞர்களான மதிப்பிற்குறிய திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள், சொல்லின் செல்வி திருமதி. பாரதி பாஸ்கர், பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களில் ஒருவர் விளக்கம் தர இயைந்து தருவார்கள் என நம்புகிறேன். .கம்பனின் ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகை ஶ்ரீஇராமனின் அழகில் மையல் கொண்டு அவரை அடைந்நே தீர்வது என ஒரு அழகிய வடிவங் கொண்டு அவரிடம் தன் காதலை கூறுகிறாள். 'ந...

காற்றாடி

Image
  காற்றாடி காற்றில் பறந்தது காற்றாடி கயிற்றின் அசைவுக் கேற்றபடி அசைத்தவன் அனங்கன் ரூபமடி அணங்கவள் வதனம் சிவந்ததடி தென்றல் காற்றும் விசையாடி புயலாய் சீற்றம் கொண்டதடி அனங்கன் கைகயிறும் அறுந்ததடி காற்றாடி எங்கோ பறந்ததடி ஆக்கமும், பதிவும் சேதுமாதவன் வெங்கட்ராவ் +918838535445 ssssethu@gmail.com

கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன்

Image
கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன் வாலியை மறைந்து இருந்து வீழ்த்திய இராமன், வாலிக்கு மோட்சமளித்து, சுக்ரீவனுக்கு பட்டம் சூட்டிய பின், தம்பி இலக்குவன் இரகுவரனை வாலியை மறைந்து கொன்ற இழிச்செயலை 'தருமம் அற்ற செயலென' வெதும்புகின்றான். அதற்கு மறுமொழியாக இரகுவரன் 'தான் செய்த செயலுக்கு பரிகாரமாக' தவம் செய்வதாக கூறுகறார். 'இல்லறந் துறந்தி லாதோர் இயற்கையை யெதிர்ந்து போரின் வில்லறந் துறந்து வாழ்வேற் கின்னன மேன்மை யில்லாச் சில்லறம் புரிந்து நின்ற தீமைகள் தீரு மாறு நல்லறந் துறந்த நோன்பின் நவையற நோற்பல் என்றான்' இலக்குவனிடம் தான் வில்லறத்தை மீறியதற்காக வருந்தும் ஶ்ரீராமர், மேலும் கூறுகிறார். இவ்வுலகில் உண்மையுடையவர்கள் ஒரு சிலரே. நமக்கு வேண்டிய நன்மை என்ன என்று பார்த்துக் கொண்டு, மற்றவைகளை நீக்க வேண்டும். அதுவுமேயின்றி குற்றமில்லாதவன் என்று சொல்ல பூவுலகில் யாரும் இல்லை. ஆம்! 'மறுவில்லாத உத்தமன் இந்த உலகில் ஏது? இருக்கவே முடியாது' என்ற உண்மையை இராமன் மூலமாக கம்பர் உணர்த்துகிறார். வாலி சிறந்த சிவபக்தி செல்வன். வாலி வேத ஞானம் பெற்றவன். அந்தணர்கள் மட்ட...

அன்பெனும் கவிதை

Image
அன்பெனும் கவிதை அன்பு அலைகடல் போல் ஆர்ப்பரிக்காது ஆர்ப்பரிக்கும் அன்பதனில் இல்லை இன்பம் இன்பமில்லா அன்பது ஆகுமாம் ஈயம் ஈயமில்லா அன்பில் உண்டோ உயர்வு உயர்வில்லா அன்பு அது ஊனமாகிடுமே ஊனமுற்ற அன்பில் உண்டோ எழுமை எழுமைக்கில்லா அன்பு தாராது ஏற்றம் ஏற்றமில்லா அன்பது தருமே ஐயம் ஐயமுற்ற அன்பில் இராதே ஒளி ஒளியில்லா அன்பது ஓங்கி உயராது ஓங்கல் இல்லா அன்பிற்கு ஔடதமேது ஔடதமில்லா அன்பிற்கு முற்றேதுஃ ஆக்கமும் பதிவும்; சேதுமாதவன் வெங்கட்ராவ் +91 8838535445 சென்னை, தமிழ்நாடு, இந்தியா ssssethu@gmail.com  

தமிழ் இசை மும்மூர்த்திகள்

Image
  தமிழ் இசை மும்மூர்த்திகள் இசை உலகில் சங்கீத மும்மூர்த்திகள் என அறியப்பட்டவர்கள் தியாகராஜர் , சியாமா சாஸ்திரிகள் , முத்துசாமி தீட்சிதர் ஆவர் . இது போலவே தமிழ் இசையின் மும்மூர்த்திகளென தமிழகம் போற்றும் புகழுடையவர்கள் திருமிகு சான்றோர் முத்துத்தாண்டவர் , மாரிமுத்தா பிள்ளை , அருணாசலக் கவிராயர் எனும் மூவர் . தேனினும் இனிய தமிழை கர்நாடக சங்கீத ராகங்களில் மிக நேர்த்தியாக பாடியவர்கள் இவர்கள். மார்கழி மாத சங்கீத சபாக்களில் இவர்களில் பாடல்கள் இடம் பெறாமல் இராது. ஆனால் சற்றே வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது இவை குறைவாகவே இருப்பதுதான் . இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் , பழம் பாடகர்கர்களான , திருமதி சுப்புலக்ஷ்மி , டி கே பட்டம்மாள் , ஜி என் பி , போன்றோருக்கு பின் தமிழிசை மும்மூர்த்திகளின் எத்துணை பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்பதே ஒரு கேள்விக்குறி ? 1. ஏன் பள்ளி கொண்டீர் ஜயா 2. யாரோ இவர் யாரோ 3. எனக்குன் இரு பதம் என்பதே திரும்ப திரும்ப ஒலிக்கின்றது . முத்துத் தாண்டவரின் பவ பிரியா அல்லது பவானி என்ற ராகத்தில் அமைந்த ' பூலோக கிரி கைலாச கிரி சித...

பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார்

Image
  பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார் ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி 61ம் ஸ்லோகம் பக்தியைப் பற்றி கூறுகிறது. பக்தியின் உயர்ந்தவன் கண்ணப்பன். பின்னாளில் அவனைத் தடுத்தாட் கொண்ட சிவனாரின் அருளால் கண்ணப்ப நாயனார் என நாமம் கொண்டார். மாணிக்கவாசகனார் தனது திருக்கோத்தும்பியில் தன்னையும் திருக் கண்ணப்பரைப் போல் ஆக்கி தன்னை அழைத்துக் கொள்ள இறைவனை வேண்டுகிறார். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை 'வா' என்ற வான் கருணை கண்ணப் பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி சிவன் கண்ணப்பனை தடுத்தாட் கொண்டு 'கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க' என்று பணிக்கிறார். கண்ணப்பரின் உள் நிறைந்த அன்பு வழி நடை; சிரசில் சிவனின் அர்ச்சனைக்கு மலர்.கணம் கண்ணப்ப நாயனார் நடந்த மிதியடி சிவலிங்கத்திற்கு வழிகாட்டியானது வாயிலிருந்த உமிழ் நீர் திரிபுரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகியது சிறிதுண்டு சுவை கண்ட ஊனமது தேவனுக்கு படையலாகிறது பக்தி எதையும் செய்ய வைத்தது. அன்பரென்போர் வேடுவனன்றி வேறு யார்? ஆக்கமும் படைப்பும்; சேதுமாதவன் வெங்கட்ராவ் ssssethu@gmai...