சிவனருள் என்னும் நீல ஒளி
திருமந்திரம் - 77 'மாலாங்க னேயிங்கு நான் வந்த காரணம் நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சிவாங்க வேதத்தை செப்ப வந்தேனே' 'சிவாய நமய என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை ஐயனே; இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்ச பூதங்களுக்கு அடையாளமாக்கி அதனையே இந்த உடலில் ஐக்கியமாக்கி இருக்கிறது பிரபஞ்சம். பஞ்ச பூதங்கள் ஆகாயம் - புருவமத்தி - 'ய' எனும் அட்சரம் - பரந்தவெளி - ஸ்படிக நிறம். காம, க்ரோத, லோப, மோக, மத செயல்களை குறிப்பது. வாயு - விசுத்தி (கண்டம்) - 'வா' எனும் அட்சரம் - காற்றும் புகையும் - பச்சை மற்றும் ஸ்படிக நிறம் - இருத்தல், நடத்தல், ஓடல், கிடத்தல், நிற்றல் போன்ற செயல்களைக் குறிப்பது. தேயு (தீ) - அநாகதம் (இருதயம்) - 'சி' எனும் அட்சரம், நெருப்பு, சிவப்பு நிறம், - பயம், அகங்காரம், சோம்பல், தூக்கம், மைதுனம் போன்ற செயல்களைக் குறிப்பது. அப்பு (நீர்) - மணிபூரகம் (நாபி) - 'ம' எனும் அட்சரம், வெள்ளை மற்றும் ஸ்படிக நிறம் - உதிரம், சிறுநீர், மஜ்ஜை, மூளை முதலான உடல் கூறுகள். பிருத்திவி - மூலாதாரம் - மலர் - '...